Sunday, November 19, 2017

மாயாஜாலக்கதைத்தொடர் 6


அத்தியாயம் 6

தேள்களின் தாக்குதலும் மேகப்பட்டிண ரகசியமும்!

சீரான வேகத்தில் பறந்து கொண்டிருந்த கருடனிடம் கேட்டான் வீரசிம்மன்.

"காலகண்டன் கூறியபடி இருபது காத தூரம் பயணம் செய்து விட்டோம்! கீழே எவ்வளவோ நாடு நகரங்கள் தெரிகின்றன! அதில் ஒன்று மேகப்பட்டினமாக இருக்கலாம் இல்லையா?

"இருக்கலாம்! ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அது கீழே உள்ள சாதாரண நகரமாக இருக்க நியாயம் இல்லை!"

"பின்?"
"அதாவது அது ஒரு வேளை.. கருட நந்தன் முடிப்பதற்குள் திடீரெனெ எங்கிருந்தோ ஒரு 

நெருப்பு கோளம் அவர்களை நோக்கி பாய்ந்து வந்தது!
கடைசி வினாடியில் கவனித்த வீரசிம்மன் கருட நந்தனை சாய்த்து கண நேரத்தில் வாளை உருவி அந்த தீக்கோளத்தை வெட்டினான்! சற்று விலகிச்சென்று  பின்னர் முழுவேகத்துடன்  வந்தது!

இம்முறை கருட நந்தன் கொஞ்சம் கீழே இறங்கி தன் இறக்கைகளை படு வேகமாக அசைத்தது! சூறாவளியே உருவானது போல் இருந்தது! வீரசிம்மன் அதன் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டான். வேகமான காற்றசைவிற்கு

அந்த நெருப்புக்கோளத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை! அப்படியே சாம்பலாகி அந்தரத்தில் கலந்தது! கருட நந்தன் தனது வேகத்தை குறைத்தது.

"ஆபத்து ஆரம்பமாகி விட்டதாக எண்ணுகிறேன் ! இனி கவனமாக செயல்பட வேண்டும்!
அப்போது கருட நந்தன்  கூச்சலிட்டது " வீரசிம்மா அங்கே! வானில் ஏதோ விபரீதம்!"
வீரசிம்மன் விழிப்படைந்தான். அங்கே வானில் கரும்புள்ளிகள் தோன்றின. மெல்ல  மெல்ல பெரிதானது! அது என்னவென்று கணிப்பதற்கு சில வினாடிகள் தேவைப்பட்டது. அவை கரும்புள்ளிகள் அல்ல அவை தேள்கள்! அதுவும் பறக்கும்இராட்சத தேள்கள்!! கூட்டமாய் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தன!

"கருடா! தயாராகிக்கொள்!"
தேள்கள் நெருங்கி வந்தன. ஒன்றை சமாளிப்பதே கடினம்! இதில் கூட்டமாய் வந்தால்? வீரசிம்மன் சற்று கலவரமடைந்தாலும் வருவது வரட்டும் என்று முடிவு செய்தான்!

"கருடா வேகமாய் முன்னேறிச்செல்!" முன்னே  பாய்ந்தது! சட்டென வலப்புறம் திரும்பி ஒரு தேளை இறக்கையால் தாக்கியது! இதற்குள் வீரசிம்மன் தன்னை தாக்க வரும் தேளின் கொடுக்கை வெட்டினான்.அப்படியே தாவி அதன் மீது அமர்ந்து  வாளைப்பாய்ச்சினான்!
கொடூரமாய் ஓலமிட்டது தேள். கருட நந்தன் அலகால் ஒரு தேளையும் நகங்களால் 

இன்னொரு தேளையும் கிழித்து போட்டது! வீரசிம்மன் மின்னல் வேகத்தில் வாளைச்சுழற்றி சில தேள்களை  வெட்டி வீழ்த்தினான்! தேள்களின் எண்ணிக்கை குறைந்ததே தவிர அவைகளின் வேகம் குறைய வில்லை! கொட்டுவதற்கு சமயம் எதிர்பார்த்து தாக்கின. வீரசிம்மன் யோசித்தான் கருட நந்தா! இப்படியே போரிட்டால் நாம் சோர்ந்து விடுவோம்! இதைதான் இவைகள் எதிர்பார்க்கின்றன. நான் சொல்கிறபடி செய்! என்று கையில் வாளை கெட்டியாக பிடித்து கொண்டு சக்கர வட்டமாக சுற்ற சொன்னான்.
கருட நந்தன் கூறியது "வீரசிம்மா! தாங்கள் கவலை கொள்ள வேண்டாம் விஷம்  என்னை பாதிக்காது. தங்கள் கையிலிலுள்ள இரட்சை உங்களை பாதுகாக்கிறது!
இதோ நீங்கள் கூறியபடி சுற்றுகிறேன் கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்!" என்று சக்கரவட்டமாக  சுற்றத்தொடங்கியது!  வீரசிம்மனின் வாள் வீச்சில் தேள்கள் சின்னாபின்னமாயின! இறுதியில்  போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது! தனியே எஞ்சி நின்ற தேளையும் இரண்டாகப்பிளந்து போட்டது கருடன்!

கடுமையாக போரிட்டதால் சோர்வடைந்தான் வீரசிம்மன்.அவனுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டி சமுத்திரத்தை நோக்கி சென்றது!
கடல் மேல் பறக்க அப்படியே முகத்தில் தெளித்து கொண்டான்.

"கருடா நாம் இப்படியே பயணம் செய்ய முடியாது! ஏதாவது நகரத்திற்குள் சென்று மேகப்பட்டினத்தை பற்றி விசாரிக்கலாம்""வீரசிம்மா! எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு சந்தேகம் உள்ளது! தாங்கள் மேகப்பட்டினத்திற்கு போகச்சொன்னவுடன்  அது சாதாரண நகரமாக இராது என்றே எண்ணினேன்! அது ஒருவேளை பெயருக்கேற்றாற்போல் மேகத்தினுள் இருந்தால்?"

நீ சொல்வதிலும் நியாயம் உள்ளது! இதை எப்படி தெரிந்து கொள்வது? அட! நாம் காலகண்டனை மறந்து விட்டோமே! என்று இடுப்பில் வைத்திருந்த சிமிழை திறந்து காலகண்டனைஅழைத்தான்! காலகண்டன் ப்ரசன்னமானது

"காலகண்டா! நீ சொல்லியபடி நாங்கள் இருபது காத தூரம் கடந்து விட்டோம் ஆனால் எங்கிருந்தோ வந்த மாயத்தேள்கள் எங்களை குழப்பிவிட்டன! உண்மையில் 

'மேகப்பட்டினத்தை' அடையும் வழியை கூறுவாய். அன்று நான் கேட்பதற்குள் நீ மறைந்து விட்டாய்! இன்றாவது முழு விவரத்தை கூறு!"

"பிரபோ! குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்னால் வெளியே இருக்க முடியும்!
இப்போது நான் வேகமாக விபரமாக கூறுகிறேன்! கவனமாக கேளுங்கள்!
மேகப்பட்டினத்தை அந்த சிகந்தன் மந்திரவாதி தனது மாயத்தால் உருவாக்கி உள்ளான்! அது பூமியில் இல்லை. வானத்தில் உள்ளது! அதுவும்  கண்ணுக்கு தெரியாது! குறிப்பிட்ட மந்திரத்தை சொன்னால் மட்டுமே அதற்கான வாசல் கதவு திறக்கும் உள்ளே சென்றபின் என்ன ஆகும் என்று தெரியாது! ஏனென்றால் மனிதர்கள் யாருக்கும் அந்த வாசலை அடையும் வழி தெரியாது! நான் தங்களுக்கு அந்த மந்திரத்தை ஒரு முறை சொல்கிறேன் மனனம் செய்துகொள்ளுங்கள்

"மறைந்துள்ள மாளிகையின் வாசலே தோன்றுவாய் என்னெதிரே! சிகந்தன் பேரால் ஆணை " இதை கூற வாசல் தோன்றும்.மாய மாளிகையில் சிகந்தன் வசிப்பிடம்"

"இது போதும் காலகண்டா! இனி நாங்களே எங்கள் முயற்சியின் மூலம் மீதி
சங்கதிகளை அறிந்துக்கொள்கிறோம்! "

பிரபோ! சிகந்தனின் இருப்பிடத்தில் மனித சக்தியை விட மாய சக்தி தான் பெரிது! ஆகவே இந்த குளிகையைகளை (மாத்திரை) வைத்துக்கொள்ளுங்கள்
என்று கையில் சில குளிகைகளை வரவழைத்து நீட்டியது  இதில் ஒன்று சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்க  வைக்கும்! பசி தாகம் ஏற்படாது.
இன்னொன்று உருமாற வைக்கும்! அந்தந்த சமயத்திற்கேற்றார்போல்  
பயன்படுத்திக்கொள்ளுங்கள் "

வீரசிம்மன் குளிகைகளை பெற்றுக்கொண்டான்! " நன்றி காலகண்டா!"
காலகண்டன் மறைந்தது! வீரசிம்மன் ஒரு குளிகையை எடுத்து கருட நந்தனிடம் தர அது " என்னால் பசி தாகம் இல்லாமல் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்க முடியும் தங்களுக்கு தான் இது அவசியம்!"

வீரசிம்மன் குளிகையை வாயில் போட்டான் புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது! உற்சாகத்துடன் கருடனின் மேல் அமர்ந்தான் கருடன் உயிரே எழும்பியது!
வானின் நடுவே நின்றது. வீரசிம்மன் "மறைந்துள்ள மாளிகையின்  வாசலே தோன்றுவாய் என்னெதிரே சிகந்தன் பேரால் ஆணை!" மறுகணம்

இடி முழக்கம் வானையே  கிடு கிடுத்ததுஅப்போது!
தொடரும்..

No comments:

Post a Comment