Wednesday, October 14, 2020

ஐந்து வயது சிறுவன் உருவாக்கிய காமிக்ஸ்

  நாம் எல்லோரும் காமிக்ஸ் கதைகளை சராசரியாக பத்து அல்லது அதற்குமேல் தான் படிக்கத் தொடங்கி இருப்போம், வெகு சிலருக்கு இன்னும் சிறு வயதில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் ஒரு சிறுவன்  வெறும் ஐந்து வயதில் காமிக்ஸ் படைத்து சாதித்துள்ளான்!  நம்பவில்லயன்றாலும் அது நிஜம்!  அந்த சிறுவன் பெயர் ' மலாச்சாய் நிக்கோல்'( malachai Nicolle)  இவனது சகோதரர்

ஈதன் நிகோல் ஒரு சிறந்த காமிக்ஸ் ஒவியர் ஆவார்.  மலாச்சயின் கற்பனையில் உருவான காமிக்ஸிற்கு அவன் அண்ணன் ஈதன் உருவம் கொடுத்தார்!  அது தான் 'ஆக்ஸ் காப்'(axe cop) 

என்ற காமிக்ஸ் கதாபாத்திரம்! இருவரும் இணைந்து அதற்கான கதைகைளை உருவாக்கினர். கதையில் லாஜிக்கெல்லாம் கிடையாது! வெறும் மேஜிக்தான்!

கதையின் ஆரம்பத்தில் நாயகன் ஒரு சராசரி போலீஸ்காரர் தான், அவர்  கையில் தீயணைப்பு வீரர் பயன்படுத்தும் கோடரி ஒன்று கிடைக்க அன்றிலிருந்து 'axecop'(கோடரி போலீஸ்) என பெயர் பெறுகிறார்! இவருக்கு துணையாக flute cop என்பவர் வருவார், அவர் திடீரென டைனோசர் வீரராக மாறிவிடுவார்! அயல்கிரக ஜந்துக்கள், ரோபோக்கள் சூப்பர் வில்லன்கள் என எக்கசக்கமான கற்பனை கதைக்களம்!

நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டுள்ள கதைகள் ரசிக்கும் படியாக உள்ளது.  

ஆரம்பத்தில் பேஸ்புக்கில் மட்டும் கதைகளை வெளியிட்டவர்கள் பின்னர் வெப் காமிக்சாக வெளியிட்டனர். மிகுந்த வரவேற்பை பெற்றதால் காமிக்ஸ் நிறுவனங்கள் நான் நீ என் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்ய வந்தனர். கோதம் என்ட்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து  கொண்டனர். டார்க் ஹார்ஸ் நிறுவனம் dc மார்வெல் அடுத்து உள்ள பெரிய நிறுவனம்! 

ஆக்ஸ் காப் காமிக்ஸ் புத்தகமாகவும், வெளிவந்து வரவேற்பை பெற்றது. (அமேசோனில்  கிடைக்கின்றது).  ஃபாக்ஸ் 

தொலைக்காட்சி நிறுவனம் இதனை அனிமேசன் தொடராகும் தயாரித்து வெளியிட்டுள்ளது. பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோக்கள் you டியூப் இல் பார்க்கலாம்!

2011 ஆம் ஆண்டு சிறந்த webcomic விருது  போன்ற பல விருதுகளை பெற்றுள்ளது இந்த காமிக்ஸ்! 2012 அம் ஆண்டு வந்த சிறந்த கிராஃபிக்ஸ் நாவலில் ஒன்றாகவும் உள்ளது

தற்போது பதினாறு வயதாகும் malachai எதிர்காலத்தில் ஸ்டான் லீ போல உருவானால் ஆச்சரியமில்லை! நம் வீட்டுக் குழந்தைகளும் திறமைசாலிகளே! அவர்களுக்கும் மலாச்சேயின் அண்ணன் ஈதன் போல் துணையிருந்தால் நிச்சயமாக காமிக்ஸ் சாதனை படைப்பார்கள். நாம் அவர்களை காமிக்ஸ் படிக்கவாவது தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் கற்பனா சக்தி கொஞ்சமேனும் வளரும். மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வும் காமிக்ஸ் வளர்ச்சி பெறும்!

No comments:

Post a Comment